• Human Rights Commission of Sri Lanka
  • Human Rights Commission of Sri Lanka
  • Human Rights Commission of Sri Lanka
  • Human Rights Commission of Sri Lanka
எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடன் பிறந்தவர்கள், கௌரவத்திலும் உரிமையிலும் சமமான உரிமை கொண்டவர்கள்/ எவரையும் தன்னிச்சையாகக் கைது செய்யவோ, தடுத்து வைக்கவோ அல்லது நாடு கடத்தவோ முடியாது/ எவரையும் அடிமையாக நடாத்தவோ அல்லது அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவோ அல்லது அடிமை வியாபாரத்தில் ஈடுபடுத்தவோ முடியாது. எந்த ஒருவரையும் சித்திரவதைக்கு உட்படுத்தவோ, கொடூரமாக நடாத்தவோ, இழிவாக நடாத்தவோ அல்லது தண்டனைக்குட்படுத்தவோ முடியாது. சட்டத்தின் முன் எந்த ஒரு தனி நபரும் மனிதனாக அங்கீகரிக்கப்படுவதற்கு உரிமை உள்ளவர். அனைவருக்கும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் ஒன்று சேர்ந்து இயங்குவதற்கும் உரிமை உள்ளது. தன்னுடைய நாட்டின் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கு எவர் ஒருவருக்கும் உரிமை உள்ளது. தன்னுடைய நாட்டின் பொதுச் சேவைகளை சமமாகப் பெற்றுக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது/ சிந்திப்பதற்கு, மனச்சாட்சியின் படி நடப்பதற்கு, விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கு குழந்தைக்கு உள்ள சுதந்திரத்தை அரச தரப்பினர் மதிக்கின்றனர்/ அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் ஒன்று சேர்ந்து இயங்குவதற்கும் குழந்தைக்கு உரிமை உள்ளது என்பதை அரச தரப்பினர் அங்கீரித்துள்ளனர்/ குழந்தையின் உளநல, உடல் நல, ஆன்மீக மற்றும் ஒழுக்க நெறிமுறையுடனான சமூக அபிவிருத்திக்குமான எல்லா குழந்தைகளுக்குமான உரிமையை அரச தரப்பினர் அங்கீகரித்துள்ளனர்/ சாத்தியமான ஒவ்வொரு வழிமுறைகள் ஊடகவும் உயர் கல்வியை அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக்குதல்/ தம்மால் அடையக்கூடிய அதிகபட்சமான சிறந்த உடல் உள ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அனைவருக்கும் உள்ள சுதந்திரத்தை உறுதி செய்தல்.

ஏப்ரல் 23, 2012 அன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மனிதஉரிமைகள் உயர் டிப்ளோமா கற்கை நெறி அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி பிரியந்த ஆர்.பி.பெரேரா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொதுப்போக்குவரத்து நடைமுறையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் செல்லும் இடங்களின் பெயர்ப்பலகைகள் இடப்படவேண்டும் என்று கொண்டுவந்த உத்தரவுக்கு அமைய இலங்கை போக்குவரத்துச் சபை இத்தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இபோச தலைவர், மாகாண மட்ட முகாமையாளர்களுக்கும் பஸ்நிலைய மேலதிகாரிகளுக்கும் இது தொடாபில் உரிய நடவடிக்கை எடுத்து மும்மொழிகளிலும் பஸ் செல்லும் இடங்களின் பெயர்களைக் காட்சிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார். முக்கியமாக சிங்களத்திலும் தமிழிலும் இப்பெயர்கள் போடப்படுவது முக்கியம்.

இது தொடர்பன சுற்று நிருபம் ஏப்ரல் 9, 2012 அன்று முதல் அமுலுக்குவரும் வரையில் உரிய நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தது. இதன் முன்னேற்றம் பற்றி யூன் 23, 2012க்கு முன்னதாக உரிய அதிகாரிகள் அறிவிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பான முறைப்பாடுகளை 2012 மார்ச் 27 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இமஉஆகு வின் தலைவர் விசாரித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களுக்கும் சர்வதேசப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒரு திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் ஆணைக்குழுவின் பிரதேச உத்தியோகத்தர்கள் தேசிய மனித உரிமைகள் நிறுவகங்களின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு மனித உரிமைகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆசிய பசுபிக் மன்று மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (யுஎன்டிபி) அமுல்படுத்தும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சித் திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்குபற்றி மனித உரிமைகள் தொடர்பாகத் தற்பொழுது இடம்பெறும் விடயங்கள் பற்றி ஆராய்ந்தனர்.   இக்கலந்துரையாடல் மும்மொழி மொழிபெயர்ப்புடன் இடம்பெற்றமை இதன் முக்கிய அம்சமாகும். இதன்மூலம் கலந்து Read More>>

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மே 30 2011 அன்று ஏற்றுமதி வர்த்தக வலயம் அல்லது சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கீழ்மட்ட அதிகாரிகள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை சட்டத்தை மதிக்காமல் செயற்பட்ட அனைவருக்கும் எதிராக உரிய சாட்சியங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் என இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. Read More>>

புதிய நிகழ்வுகள் இன்னும் சேர்க்கப்படவில்லை